EBM News Tamil
Leading News Portal in Tamil

ஊரடங்கு நேரத்திலும் கிரிக்கெட்: சிறுவர்களுடன் ரெய்னா குதூகலம்..! – வீடியோ

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும் ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனிடையே ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீட்டில் ஓய்வில் இருக்கும் அனுபவத்தை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவிட்டு வருகின்றனர்.
கொரோனா பரவுதலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரெய்னா தன்னால் முடிந்த உதவியைச் செய்துள்ளார். பிரதமர் பொது நிவாரணத்திற்கு 31 லட்சம் ரூபாயும், உத்தரப்பிரதேச முதல்வர் பொது நிவாரணத்திற்கு 21 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.