EBM News Tamil
Leading News Portal in Tamil

காஞ்சிபுரம் அருகே இளம்பெண் எரித்துக் கொலை: கேரள மாணவி என சந்தேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட இளம்பெண் கேரளாவில் மாயமான கல்லூரி மாணவியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஜெஸ்னா, இவர் கஞ்சரபள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து ஜெஸ்னாவை காணவில்லை, கடைசியாக முக்குகுத்தட்டு பேருந்து நிலையத்தில் ஜெஸ்னாவை பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.
ஜெஸ்னா மாயமானது குறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 50 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றம் இல்லை, இதனையடுத்து ஜெஸ்னா குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கேரள காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி செங்கல்பட்டி அடுத்த படவேலி தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதியில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் இளம்பெண் உடல் இருப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வயது, உயரம், எடை உள்ளிட்டவற்றில் உயிரிழந்த பெண்ணிண் உடல் ஜெஸ்னாவுடன் ஒத்துப்போனதால், இது குறித்து காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் கேரள காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.