EBM News Tamil
Leading News Portal in Tamil

உன் காதலன் ஆவி என்மேலதான் இருக்கு: பெண்ணை 15 ஆண்டுகளாக குகையில் மறைத்து பலாத்காரம் செய்த மந்திரவாதி!

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 13 வயதில் கடத்திய சிறுமியை 15 ஆண்டுகளாக மந்திராவதி ஒருவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமி ஒருவரை அவரது பெற்றோர், உடல்நலக்குறைவு காரணமாக அப்பகுதியில் உள்ள மந்திரவாதியிடம் அழைத்து சென்றனர். அப்போது அந்த மந்திரவாதி சிறுமிக்கு பூஜை செய்ய வேண்டியுள்ளாதால் அவரை தன்னிடம் விட்டுவிட்டு பின்னர் வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனை நம்பி சிறுமியின் பெற்றோரும் அவரை மந்திரவாதியிடமே விட்டு சென்றுள்ளனர். பின்னர் வந்து கேட்டபோது சிறுமி தலைநகர் ஜகார்த்தாவுக்கு வேலை தேடி சென்றுள்ளார் என கூறியுள்ளார்.
நம்பிய பெற்றோர்
மந்திரவாதி கூறியதை கேட்டு அப்படியே சென்றுவிட்டனர் சிறுமியின் பெற்றோர். ஆனால் சிறுமியிடம் இருந்து எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
28 வது பெண்ணாக மீட்பு
சுமார் 15 ஆண்டுகள் கழிந்தோடிவிட்டன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மந்திரவாதியின் வீட்டின் அருகே உள்ள குகையில் இருந்து அந்த சிறுமி 28 வயது பெண்ணாக மீட்கப்பட்டுள்ளார். திடுக்கிடும் தகவல் 28 வயதான அந்த பெண்ணை போலீசார் ஹெச் என அழைக்கின்றனர். ஹெச்சிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்ஜென்ம காதலர் அதாவது தன்னை அருகில் உள்ள குகையில் அடைத்த அந்த மந்திரவாதி அம்ரின் என்ற இளைஞர் முன்ஜென்மத்தில் அந்த சிறுமின் பாய் பிரண்ட்டாக இருந்ததாக கூறி ஒரு போட்டோவை காண்பித்து நம்ப வைத்துள்ளார்.