புதுக்கோட்டை விவசாயிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த புகாரில் வங்கி மேலாளர் கைது
புதுக்கோட்டை: சோளகம்பட்டியில் விவசாயிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த புகாரில் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயி ராமதாஸ்க்கு வழங்கிய ரூ.16 லட்சம் வங்கிக் கடனில் ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கி விவசாயக் கடன் மேலாளர் பிரவீன் குமார், கிளை மேலாளர் பெர்லின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள வங்கி ஊழியர்கள் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.