போதை பொருள் வைத்திருந்ததாக உதவி மக்கள் தொடர்பு அதிகாரி கைது
திண்டுக்கல்; வத்தலகுண்டில் 251 கிலோ கஞ்சாவை காரில் கடத்தியதாக உதவி மக்கள் தொடர்பு அதிகாரி அருண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருணுடன் கஞ்சாவை கடத்தி வந்ததாக ரவி மற்றும் ஸ்ரீராம் ஆகிய இருவரும் போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.