EBM News Tamil
Leading News Portal in Tamil

உலகளவில் கொரோனாவிற்கு 1,14,208 பேர் பலி; அமெரிக்காவில் 22 ஆயிரத்தை கடந்தது

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,14,208 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. சீனாவில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடம்பதித்துள்ளது. சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தபட்ட நிலையில் மற்ற நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.

அமெரிக்காவில் அதிகபட்சமாக கொரோனா வைரஸால் 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 22,105 பேர் பலியாகி உள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் இருப்பதால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது.

ஸ்பெயினில் 17,209 பேரும், இத்தாலியில் 19,899 பேரும், பிரான்சில் 14,393, பிரிட்டனில் 10,612 பேரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 9,205 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 331 பேர் உயிரிழந்து உள்ளனர்.