EBM News Tamil
Leading News Portal in Tamil

பேசுவதை மொழிபெயர்க்கும் முதல் ஏஐ தொழில்நுட்பம்: ஜெய்ப்பூர் ஐஐடி மாணவர் உருவாக்கம் | Jaipur IIT student creates First AI technology to translate speech


ஜெய்ப்பூர்: பேசுவதை பேச்​சாக மொழி பெயர்க்​கும் உலகில் முதல் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தை, ஜெய்ப்​பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உரு​வாக்​கி​யுள்​ளார்.

ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்​வால். வாராணசி பனாரஸ் இந்து பல்​கலைக்​கழக ஐஐடி மாணவர். இவர் பிக்ஸா என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை தொடங்​கி​னார். மனிதர்​கள் பேசுவதை போல் குரலை நேரடி​யாக மொழிபெயர்ப்பு செய்​யும் லூனா என்ற செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை இவர் உரு​வாக்​கி​யுள்​ளார். இது பேச்சு வடி​விலேயே விரை​வாக​வும், உணர்​வுபூர்​வ​மாக​வும் குரல் வடி​விலேயே மொழி பெயர்க்​கிறது. இதில் உள்ள தொழில்​நுட்ப கட்​டமைப்பு பேசும் தொனியை மாற்​ற​வும், பாட​வும் அனு​ம​திக்​கிறது. இது மனிதர்​களிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்​படுத்​துகிறது.

இதை உரு​வாக்​கிய ஸ்பார்ஸ் அகர்​வால், சமீபத்​தில் மத்​திய தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவை சந்​தித்து பாராட்​டைப் பெற்​றார்.

இதுகுறித்து அகர்​வால் கூறுகை​யில், ‘‘இந்​தி​யா​வின் ஏஐ எங்கே என்ற கேள்​வியை அனை​வரும் கேட்​கின்​றனர். அதற்​கான பதில் இந்த லூனா ஏஐ மாடல்​தான். பேச்சை நேரடி​யாக மொழி பெயர்க்​கும் உலகின் முதல் ஏஐ தொழில்​நுட்​பம் இது​தான். உலகத் தரத்​திலான தொழில்​நுட்​பம் இந்​தி​யா​வில் இருந்து வரும் என்​ப​தற்கு இது​தான் சான்​று’’ என்​றார்.

லூனா ஏஐ தொழில்​நுட்​பம்: உரு​வாக்​கத்​தில் அகர்​வாலுடன் இணைந்து நிதிஷ் கார்த்​திக், அபூர்வ் சிங் மற்​றும் பிர​தி​யுஷ் குமார் ஆகியோ​ரும்

பணி​யாற்​றி​யுள்​ளனர்​.