EBM News Tamil
Leading News Portal in Tamil

கணினி அவசர நிலைக் குழு மூலம் தமிழகத்தில் 80,000 ஐபி முகவரிகள் முடக்கம்! | IP addresses blocked in Tamil Nadu


சென்னை: தமிழ்​நாடு கணினி அவசரநிலை குழு மூலம், சந்​தேகத்​துக்​குரிய 80 ஆயிரம் ஐபி முகவரி​கள் முடக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசின் தகவல் தொழில்​நுட்ப சொத்​துகள், சேவை​களை பாது​காக்​கும் நோக்​குடன் முதல் இணைய பாது​காப்​புக் கொள்கை கடந்த 2020-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்​டது. அதை தொடர்ந்​து, கிளவுட் கம்ப்​யூட்​டிங் உள்​ளிட்ட தற்​போதைய தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப புதிய நடை​முறை​களை சேர்க்​க​வும், புதிய டிஜிட்​டல் அச்​சுற்​று​தல்​களை எதிர்​கொள்​ள​வும் இணைய பாது​காப்​புக் கொள்கை 2.0 கடந்த 2024-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்​டது. இதை திறம்பட செயல்​படுத்​தும் வித​மாக, தகவல் தொழில்​நுட்​ப​வியல், டிஜிட்​டல்சேவை​கள் துறை மூலம் தமிழ்​நாடு கம்ப்​யூட்​டர் எமர்​ஜென்சி ரெஸ்​பான்ஸ் டீம் (கணினி அவசரநிலை பதில் அளிப்பு குழு) உரு​வாக்​கப்​பட்​டது.

எல்காட் நிறுவனம்: இணைய பாது​காப்​புக்​கான உள்​கட்​டமைப்​புக்​காக, மேம்​பட்ட கணினி மேம்​பாட்டு மையத்​துடன் இணைந்து எல்​காட் நிறு​வனம் இந்த குழுவை உரு​வாக்​கியது. தன்​னாட்சி அமைப்​பான இது அனைத்து அரசுத் துறை​களு​டன் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு வரு​கிறது. இதன்​மூலம் 500-க்​கும் மேற்​பட்ட அரசு இணை​யதளங்​கள் கையாளப்​பட்டு வரு​கின்​றன. அதே​போல, 1,200 தகவல் தொழில்​நுட்ப சொத்​துகள் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. சைபர் பாது​காப்பு குறித்த 130 பயிற்சி வகுப்​பு​கள் நடத்​தப்​பட்டு 3,200 அதி​காரி​கள் பயிற்சி பெற்​றுள்​ளனர்.

அதில், 36 தலைமை தகவல் பாது​காப்பு அதி​காரி​கள், 103 தகவல் பாது​காப்பு அதி​காரி​கள் அரசுத் துறை​களில் நியமன​மும் செய்​யப்​பட்​டுள்​ளனர். இத்​துடன், தமிழகத்​தில் சந்​தேகத்​துக்​குரிய 80,039 ஐபி முகவரி​கள் (IP address – இணைய இணைப்பு பெற்​றுள்ள சாதனங்​களுக்​கான பிரத்​யேக அடை​யாள எண்) கண்​டறியப்​பட்டு முடக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.