பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பாதியாக குறைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர் 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9 ரூபாய் 48 பைசாவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 3 ரூபாய் 56 பைசாவும் மத்திய வரி விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.