உங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பை அறிந்துகொள்ள உதவுகிறது மாநகராட்சி செயலி..!
சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கொரோனா பாதிப்பு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள சென்னை மாநகராட்சி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் அதிகபட்சமாக 228 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருக்கின்றனர். பாதிப்பு உள்ள பகுதிகளில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி தொலைபேசி செயலியை முன்னதாக அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த செயலியில் சளி, காய்ச்சல் உள்ளவா்கள் தங்களது தகவல்களை பதிவேற்றம் செய்தால், ஜிபிஎஸ் உதவியுடன் மாநகராட்சி மருத்துவ அலுவலா்கள் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கே வந்து தேவையான மருத்துவ உதவிகளைச் செய்வா்.