10-ம் வகுப்பு பாடங்கள் பொதிகை டிவியில் இன்று முதல் ஒளிபரப்பு..!
கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் 10-ஆம் வகுப்பு பாடங்கள் இன்று முதல் (15.4.2020) டிடி பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 10மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பப்பட உள்ளது.
தமிழகத்தில் மார்ச் 27-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயனடையும் வகையில் 10-ஆம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் பயனடையும் வகையில் இன்று முதல் (15.4.2020) பொதிகை தொலைக்காட்சியில் காலை 10மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடவாரியாக ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.
மாணவர்கள் தற்போது உள்ள விடுமுறையை பயன்படுத்தி தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையினை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மே 2 வது வாரத்தில் ஒவ்வொரு தேர்விற்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாட்களுக்குள் பொதுத்தேர்வினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.