EBM News Tamil
Leading News Portal in Tamil

திடீர் மழையால் சென்னை குளிர்ந்தது

சென்னையில் காலையில் கடும் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் பெய்த மழையால் மாநகரில் குளிர்ந்த சூழல் நிலவியது.
சென்னையில் இந்த ஆண்டு கோடையில், கோடை மழை பெய்யவில்லை. இதனால் சென்னையில் வெப்பம் அதிக மாக நிலவியது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த 6-ம் தேதி சென்னையில் திடீர் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து 8 நாட்களுக்கு பிறகு நேற்று சென்னையில் மீண்டும் மழை பெய்தது.
நேற்று காலை சென்னையில் கடும் வெயில் வாட்டியது. நுங்கம்பாக்கத்தில் 102.56, மீனம்பாக்கத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், மாதவரம், தேனாம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதனால் மாநகரமே குளிர்ந்து ரம்மியமான சூழல் நிலவியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று 14 மிமீ மழை பதிவாகி இருந்தது. இந்த மழையால் சாலையில் மழைநீர் ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் வாகன ஓட்டி கள் பாதிக்கப்பட்டனர்.