EBM News Tamil
Leading News Portal in Tamil

27 ஆண்டுக்கு முன் மாயமானவர் மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடிப்பு: டிஎன்ஏ சோதனை நடத்த குடும்பத்தினர் கோரிக்கை | Jharkhand family finds lost member after 27 years, now an Aghori monk at Maha Kumbh


ராஞ்சி: ஜார்க்​கண்​டில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர், மகா கும்​பமேளா பகுதி​யில் அகோரியாக வாழ் வதை அவ ரது குடும்பத்​தினர் கண்டு​பிடித்​துள்ளனர்.

ஜார்க்​கண்ட் மாநிலம் தன்பாத்​தில் உள்ள புலி பகுதி​யில் வசித்தவர் கங்காசாகர் யாதவ் (65). கடந்த 27 ஆண்டுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்​படு​கிறது. இந்நிலை​யில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்​ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்​பமேளா​வில் கங்காசாகரை அவரது குடும்பத்​தினர் கண்டு​பிடித்​துள்ளனர். அவர் தற்போது அகோரி சாதுவாக சாத்​வி​யுடன் வாழ்ந்து வருகிறார்.

அவருக்கு மனைவி தன்வா தேவி என்ற மனைவி, விமலேஷ், கமலேஷ் ஆகிய 2 மகன்​களும் உள்ளனர். இதுகுறித்து விமலேஷ் கூறிய​தாவது: மகா கும்​பமேளா​வுக்கு சென்ற உறவினர்​கள், எங்கள் தந்தை போல் இருக்​கும் ஒரு அகோரியை பார்த்து ஆச்சரியம் அடைந்​துள்ளனர். அவரது புகைப்​படத்​தை​யும் அனுப்​பினர். பின்னர் அம்மா, தம்பி மற்றும் உறவினர்​களுடன் கும்​பமேளா பகுதிக்கு சென்று தேடினோம். ஒரு வழியாக அவரை கண்டு​பிடித்​தோம். அவர்​தான் எங்கள் தந்தை என்பதை அம்மா​வும் உறுதியாக கூறுகிறார். ஆனால், வீட்டுக்கு அழைத்​தால் வர மறுக்​கிறார். எங்களை அடையாளம் தெரி​யாதது போல் நடந்து கொள்​கிறார்.

மகா கும்​பமேளா முடிந்த பிறகு எங்கள் தந்தையை மீட்க, மரபணு பரிசோதனை நடத்த வேண்​டும் என்று முடி​வெடுத்​துள்ளோம். இதுகுறித்து தன்பாத் போலீஸ் துணை ஆணையரிடம் மனு அளித்​திருக்​கிறோம். அவரும் நடவடிக்கை எடுப்​பதாக கூறி​யுள்​ளார். இவ்வாறு விமலேஷ் கூறினார். தற்போது கங்காசாகர் அகோரி சாதுவாக வாழ்கிறார். அவருடைய பெயர் பாபா ராஜ்கு​மார் அகோரி என்கிறார். மனைவி தன்வா தேவி உட்பட உறவினர்கள் யாரை​யும் தெரி​யாது என்கிறார். ஆனால், அவருடைய நீள பற்கள், நெற்றி​யில் தழும்பு போன்ற அடையாளங்களை வைத்து கங்காசாகர்​தான் என்று உறவினர்கள் உறுதியாக கூறுகின்​றனர்.

இதுகுறித்து தன்வா தேவி கூறிய​தாவது: என் கணவர் கங்காசாகர் கடந்த 1998-ம் ஆண்டு எங்களை விட்டு சென்ற போது நான் கருவுற்றிருந்​தேன். அப்போது மூத்த மகனுக்கு 2 வயது​தான்.அவரைப் பார்த்​ததும் நான் அடையாளம் கண்டு​கொண்​டேன். ஆனால், அவர் தெரி​யாதது போல் நடிக்​கிறார். இவ்வாறு தன்வா தேவி கூறினார். இந்​நிலை​யில், தன்வா தேவி, மகன்​கள், உற​வினர்​கள் பலர் மகா கும்​பமேளா பகு​தி​யிலேயே ​மு​காம்​களில் தங்கி உள்​ளனர். அவரை ச​மா​தானப்​படுத்தி அழைத்து செல்ல ​முடிவெடுத்​துள்​ளனர்​.