EBM News Tamil
Leading News Portal in Tamil

4-ம் கட்ட தேர்தல் | மனு தாக்கல் தொடக்கம் | 4th Phase Election Nomination Filing Begins


புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று (ஏப். 19) முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதில் நான்காம் கட்ட தேர்தல் மே 13-ம் தேதி நடைபெற உள்ளது. ஆந்திர பிரதேசம் (25), பிஹார் (5), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்கம் (8) ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் (1) உள்ள 96 தொகுதிகள் நான்காம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் நேற்று தொடங்கின.

இதற்கான அறிவிக்கையை குடியரசுத் தலைவர் சார்பில் தேர்தல் ஆணையம் நேற்று காலையில் வெளியிட்டது.

நான்காம் கட்டத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேலும் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மாவட்ட ஆட்சியர் பிலால் மொஹியுதீன் பட், வேட்பு மனு தாக்கலுக்கான அறிவிக்கையை வெளியிட்டார்.