EBM News Tamil
Leading News Portal in Tamil

‘ஒற்றுமையே இந்தியாவின் பலம்' – பிரதமர் மோடி


புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும். மொழி உட்பட எந்த வகையிலும் பிரிவினைக்கு இடம் அளிக்கக்கூடாது. மணிப்பூர் மக்கள் கண்ணீர் சிந்தினால் மகாராஷ்டிர மக்களுக்கு வலிக்கிறது. அசாமில் வெள்ளம் ஏற்பட்டால் கேரள மக்கள் பதறுகின்றனர். இதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பு.