Latest Newsகொரோனாட்ரெண்டிங்மீம்ஸ்டெக்னாலஜிவேலைகுற்றம்ராசிபலன்ஆல்பம்Win 1 Lakh – MC PRO Contest முகப்பு » செய்திகள் » விளையாட்டு ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டம்…பார்வையாளர்கள் இல்லாமல் நடக்க வாய்ப்பு!
13-வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 29-ம் தேதி நடைபெற இருந்தது. 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக போட்டிகள் ஏப்ரல் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் ஜூலையில் போட்டிகள் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடருக்காக அணிகளின் உரிமையாளர்கள், ஒளிபரப்பு உரிமம் பெற்றோர் என பலரும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இவர்களுக்கு இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக பார்வையாளர்களே இல்லாமல் கூட போட்டிகளை நடத்தலாமா என பிசிசிஐ பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.