நார்வே செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் மற்றொரு ‘டிரா’!
ஸ்டாவெஞ்சர்: அஜர்பெய்ஜான் வீரர் சாகியார் மாமேயாரோவுக்கு எதிரான 6வது போட்டியை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ‘டிரா’ செய்தார்.
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் ஆறாவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அஜர்பெய்ஜான் வீரர் சாகியார் மாமேயாரோவுக்கு எதிர்கொண்டார். இப்போட்டியின் 32-வது நகர்த்துதலின் போது இருவரும் போட்டியை டிரா செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து இருவருக்கும் தலா 1/2 புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 6 போட்டியில் பங்கேற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 2.5 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார். நார்வேவின் கார்ல்சன் (3 1/2 புள்ளிகள்), அமெரிக்காவின் வீஸ்லி சோ (3 புள்ளிகள்), அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3 1/2 புள்ளிகள்) ஆகியோர் ‘டாப்-3’ இடங்களில் உள்ளனர்.