EBM News Tamil
Leading News Portal in Tamil

எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த ஐபிஎல் ஆணையம் தீவிரம்: மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பிசிசிஐ | iPL Commission keen to hold remaining matches BCCI awaiting central government decision


மும்பை: எஞ்​சி​யுள்ள போட்​டிகளை நடத்​து​வதற்கு ஐபிஎல் ஆணை​யம் தீவிர​மாக உள்​ளது. போட்​டிகளை நடத்​து​வது தொடர்​பாக மத்​திய அரசு முடிவுக்​காக தற்​போது இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ) காத்​திருக்​கிறது.

இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதி​யிலேயே நிறுத்​தப்​பட்​டது. அன்​றைய தினம் பஞ்​சாப் – டெல்லி அணி​கள் இடையி​லான ஆட்​டம் தரம்​சாலா​வில் நடை​பெற்று கொண்​டிருந்​தது. 10.1 ஓவர்​களில் இந்த ஆட்​டம் நிறுத்​தப்​பட்டு மைதானத்​தில் இருந்த ரசிகர்​கள் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒரு​வார காலத்​துக்கு நிறுத்தி வைக்​கப்​படு​வ​தாக பிசிசிஐ அறி​வித்​தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் அனைத்து அணி​களி​லும் இடம் பெற்​றிருந்த வெளி​நாட்டு வீரர்​களை பாது​காப்​பாக அவர்​களது தாயகத்​துக்கு அனுப்பி வைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. மேலும் இந்​திய வீரர்​கள் தங்​களது நகரங்​களுக்கு சென்​றடைய​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் பெரும்​பாலான வெளி​நாட்டு வீரர்​கள் தாயகம் திரும்​பி​யுள்​ளனர். இதனிடையே, நேற்று முன்​தினம் மாலை இந்​தி​யா,​பாகிஸ்​தான் இடையே போர் நிறுத்த அறி​விப்பு வெளி​யானது. இதனால் எல்​லைப் பகு​தி​யில் இயல்பு நிலை விரை​வில் திரும்​பும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதைத் தொடர்ந்து எஞ்​சி​யுள்ள 18 போட்​டிகளை நடத்​து​வதற்கு ஐபிஎல் ஆணை​யம் நடவடிக்கை எடுத்து வரு​கிறது. போட்​டிகளை நடத்​து​வது தொடர்​பாக மத்​திய அரசின் ஒப்​புதலுக்​காக பிசிசிஐ தற்​போது காத்​திருக்​கிறது.

அநேக​மாக வரும் 15 அல்​லது 16-ம் தேதி போட்​டிகள் மீண்​டும் தொடங்க வாய்ப்​புள்​ளது. ஒரே நாளில் இரண்​டு, இரண்டு ஆட்​டங்​களாக நடத்​த​வும் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் மே 30-ம் தேதி இறு​திப் போட்​டியை நடத்​த​வும் பிசிசிஐ முடிவு செய்​துள்​ள​தாகத் தெரி​கிறது.

இதுகுறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்​கியா கூறும்​போது, “ஒரு வாரத்​துக்கு போட்​டிகளை நாங்​கள் தள்​ளி​வைத்​தோம். அந்​தக் காலக்​கெடு முடிவதற்கு இன்​னும் 4 நாட்​கள் உள்​ளன.

போர்ப்​ப​தற்​றம் தொடர்​பாக தற்​போது நடந்து வரும் சூழ்​நிலையை பிசிசிஐ உன்​னிப்​பாக கவனித்து வரு​கிறது. இதையடுத்து ஐபிஎல் பங்​கு​தா​ரர்​கள், அணி நிர்​வாகங்​கள், மத்​திய அரசின் உயர் அதி​காரி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​திய பின்​னர் போட்​டியை மீண்​டும் தொடங்​கு​வது தொடர்​பாக அறிவிக்​கப்​படும். ஒரே நாளில் 2 ஆட்​டங்​களை நடத்​த​வும் முடிவு செய்​துள்​ளோம்.

இது​போன்ற சூழ்​நிலைகளில் மத்​திய அரசின் ஒப்​புதலைப் பெறு​வது அவசி​ய​மாகும். விரை​வில் போட்​டி தொடங்​கவுள்​ள தேதியை பிசிசிஐ அறிவிக்​கும்​” என்​றார்​.