EBM News Tamil
Leading News Portal in Tamil

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: இந்திய மகளிர் அணி சாம்பியன் | tri nation series indian women s team won title


கொழும்பு: மூன்று நாடு​களுக்கு இடையி​லான கிரிக்​கெட் போட்​டி​யின் இறுதி ஆட்​டத்​தில் இந்​திய மகளிர் அணி 97 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

இந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்​பிரிக்க அணி​கள் மோதிய 3 நாடு​கள் கிரிக்​கெட் போட்டி இலங்​கை​யில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா, இலங்கை அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறின. கொழும்​பிலுள்ள பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய இந்​திய அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 342 ரன்​கள் குவித்​தது.

ஸ்மிருதி மந்​தனா 101 பந்​துகளில் 116 ரன்​கள் குவித்​தார். பிர​திகா ராவல் 30, ஹர்​லீன் தியோல் 47, கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 41, ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 44, தீப்தி சர்மா 20 ரன்​கள் சேர்த்​தனர். பின்​னர் 343 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய இலங்கை மகளிர் அணி 48.2 ஓவர்​களில் 245 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து 97 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய மகளிர் அணி, 3 நாடு​கள் கோப்​பையைக் கைப்​பற்​றியது.

இலங்கை அணி​யில் அதி​கபட்​ச​மாக கேப்​டன் சமாரி அத்​தப்​பட்டு 51 ரன்​கள் குவித்​தார். இந்​திய அணி தரப்​பில் ஸ்னே ராணா 4, அமன்​ஜோத் கவுர் 3, சரணி ஒரு விக்​கெட் வீழ்த்​தினர். ஆட்​ட​ நாயகி​யாக ஸ்மிருதி மந்​த​னா​வும், தொடர்​நாயகி​யாக ஸ்னே ராணா​வும்​ தேர்​வு செய்​யப்​பட்​டனர்​.