EBM News Tamil
Leading News Portal in Tamil

வில்வித்தையில் இந்தியா பதக்க வேட்டை! | India hunts medals in archery shanghai world cup stage 2


ஷாங்காய்: சீ​னா​வின் ஷாங்​காய் நகரில் வில்​வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 2 போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான காம்​பவுண்ட் பிரிவு இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் மதுரா தாமங்​கோங்​கர் 139-138 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் கார்​சன் கிராஹேவை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார்.

ஆடவருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் அபிஷேக் வெர்​மா, ஓஜஸ் தியோடேல், ரிஷப் யாதவ் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 232-228 என்ற கணக்​கில் மெக்​சிகோ அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.

மகளிருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் மதுரா தாமங்​கோங்​கர், ஜோதி சுரே​கா, ஷிகிதா தனிபர்த்தி ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 221-234 என்ற கணக்​கில் மெக்​சிகோ அணி​யிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் பெற்​றது.

காம்​பவுண்ட் கலப்பு அணி​கள் பிரி​வில் இந்​தி​யா​வின் மதுரா தாமங்​கோங்​கர், அபிஷேக் வெர்மா ஜோடி 144-142 என்ற கணக்​கில் மலேசிய ஜோடியை தோற்​கடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றது.

ஆடவருக்​கான காம்​பவுண்ட் தனி​நபர் பிரி​வில் வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் ரிஷப் யாதவ், தென் கொரி​யா​வின் கிம் ஜோங்​கோவுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 145-145 என்ற கணக்​கில் சமநிலை​யில் முடிவடைந்​தது. இதைத் தொடர்ந்து நடை​பெற் ஷூட்​-ஆஃப்​பில் ரிஷப் யாதவ் வெற்றி பெற்று வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

இந்த தொடரில் இது​வரை காம்​பவுண்ட் பிரி​வில் இந்​தியா 2 தங்​கம், ஒரு வெள்​ளி, 2 வெண்​கலப் பதக்​கம் வென்​றுள்​ளது. இன்று கடைசி நாள் போட்டி நடை​பெறுகிறது. இதில் இந்​தியா மேலும் 3 பதக்​கங்​களை வெல்ல களமிறங்​கு​கிறது. இந்​திய ஆடவர் அணி வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் விளை​யாடு​கிறது. மேலும் பார்த் சாலுங்​கே, தீபிகா குமாரி ஆகியோர் அரை இறு​தி சுற்​றில்​ விளை​யாடு​கின்​றனர்​.