EBM News Tamil
Leading News Portal in Tamil

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தாயகம் புறப்பட்டனர் | Foreign players who participated in IPL 2025 season back to home


மும்பை: இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி ஐபிஎல் தொடர் பாதி​யிலேயே நிறுத்​தப்​பட்​டது. அன்​றைய தினம் பஞ்​சாப் – டெல்லி அணி​கள் இடையி​லான ஆட்​டம் தரம்​சாலா​வில் நடை​பெற்று கொண்​டிருந்​தது. 10.1 ஓவர்​களில் இந்த ஆட்​டம் நிறுத்​தப்​பட்டு மைதானத்​தில் இருந்த ரசிகர்​கள் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​டனர்.

நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் விமான நிலை​யங்​கள் மூடப்​பட்​டிருந்​த​தால் பஞ்​சாப், டெல்லி கிரிக்​கெட் அணி வீரர்​கள் மற்​றும் போட்டி ஒளிபரப்பு குழு​வினர் உட்பட சுமார் 300 பேர் சிறப்பு வந்தே பாரத் மூலம் தரம்​சாலா​வில் இருந்து டெல்​லிக்கு அழைத்து வரப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒரு​வார காலத்​துக்கு நிறுத்தி வைக்​கப்​படு​வ​தாக பிசிசிஐ அறி​வித்​தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் அனைத்து அணி​களி​லும் இடம் பெற்​றிருந்த வெளி​நாட்டு வீரர்​களை பாது​காப்​பாக அவர்​களது தாயகத்​துக்கு அனுப்பி வைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. மேலும் இந்​திய வீரர்​கள் தங்​களது நகரங்​களுக்கு சென்​றடைய​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இதன் ஒரு கட்​ட​மாக பெங்​களூரு அணி​யில் இடம் பெற்​றிருந்த ஜோஷ் ஹேசில்​வுட், ரொமாரியோ ஷெப்​பர்​டு, லியாம் லிவிங்​ஸ்​டன், பில் சால்ட், ஜேக்​கப் பெத்​தேல், டிம் டேவிட், நூவன் துஷா​ரா, லுங்கி நிகிடி ஆகிய 8 வெளி​நாட்டு வீரர்கள் நேற்று பெங்​களூரு​வில் இருந்து தங்​களது நாட்​டுக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இதே​போன்று லக்​னோ, மும்​பை, கொல்​கத்தா அணி​களில் இடம் பெற்​றிருந்த வெளி​நாட்டு வீரர்​களும் தாயகம் புறப்​பட்​டு சென்​றுள்​ளனர். இதை அந்த அணி​கள் உறுதி செய்​துள்​ளன. போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​காக ஹைத​ரா​பாத் சென்​றிருந்த கொல்​கத்தா அணி வீரர்​கள் கொல்​கத்​தாவுக்கு திரும்​பி​யுள்​ளனர்.

இதற்​கிடையே பாது​காப்பு காரணங்​களை கருதி ஐபிஎல் தொடரின் எஞ்​சிய 16 ஆட்​டங்​களை பெங்​களூரு, சென்​னை, ஹைத​ரா​பாத் ஆகிய நகரங்​களில் நடத்தி முடிப்​ப​தற்​கான நடவடிக்​கையை பிசிசிஐ முன்​னெடுத்​தது. இந்​நிலை​யில் நேற்று மாலை 5 மணி அளவில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் நிறுத்த அறி​விப்பு வெளி​யானது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லை பகு​தி​யிலும் அமைதி திரும்பி வரு​கிறது.

இந்​நிலை​யில், போர் நிறுத்​தம் ஏற்​பட்​டதை தொடர்ந்து ஐபிஎல் தொடரை மீண்​டும் நடத்​து​வது குறித்து பிசிசிஐ விரை​வில் ஆலோ​சனை கூட்​டம் நடத்​தக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. ஐபிஎல் அட்​ட​வணை​யின் படி மே 25-ம் தேதிக்​குள் தொடர் நடத்தி முடிக்​கப்பட வேண்​டும். இந்த வகை​யில் அடுத்த 5 முதல் 6 நாட்​களுக்​குள் போட்​டிகள் மீண்​டும் தொடங்​கு​வதற்​கான வாய்ப்பு உள்​ள​தாக உறு​தி செய்​யப்​ப​டாத தகவல்​கள்​ தெரிவிக்​கின்​றன.