EBM News Tamil
Leading News Portal in Tamil

‘எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் பந்துவீசுவதற்கு பயப்பட மாட்டேன்’ – மனம் திறக்கிறார் பும்ரா | I not afraid to bowl to any batsman says Bumrah ipl 2025


மும்பை: எந்​தவொரு பேட்​ஸ்​மேனுக்​கும் பந்​து​வீசுவதற்கு பயப்பட மாட்​டேன் என்று மும்பை இந்​தி​யன்ஸ் அணி வீரர் ஜஸ்​பிரீத் பும்ரா கூறி​யுள்​ளார்.

உலகில் தற்​போதுள்ள வேகப்​பந்து வீச்​சாளர்​களில் மிக​வும் அபாயகர​மான பந்​து​வீச்​சாள​ராக கருதப்​படு​பவர் ஜஸ்​பிரீத் பும்​ரா. டி20 போட்​டிகளின் கடைசி ஓவர்​களில் மிகச்​சிறந்த முறை​யில் பந்​து​வீசி எந்​தவொரு பேட்​ஸ்மேனை​யும் திணறடிக்​கும் அசாத்​திய திறமை பெற்​றவர் பும்​ரா. கடந்த ஆண்டு ஏற்​பட்ட காயம் காரண​மாக பும்ரா சில மாதங்​கள் ஓய்​வில் இருந்​தார். இதைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரின் பாதி​யில்​தான் மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்​காக களமிறங்​கி​னார் பும்​ரா. இது​வரை 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 11 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளார் அவர்.

இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற தனி​யார் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற ஜஸ்​பிரீத் பும்ரா கூறிய​தாவது: ஒவ்​வொரு ஆட்​டத்​தை​யும் புதி​தாக விளை​யாடு​வது போன்​று​தான் நான் அணுகு​வேன். இது​வரை எந்​தவொரு பேட்​ஸ்​மேனை​யும் கண்டு பயந்​த​தில்​லை. அவர் மிகச்​சிறந்த பேட்​ஸ்​மே​னாகவோ அல்​லது சராசரி​யான மட்டை வீச்​சாள​ராகவோ இருக்​கலாம். உண்​மை​யில் எந்த வீரரை​யும் கண்டு பயந்​த​தில்லை என்​பது​தான் உண்​மை. கிரிக்​கெட் விளை​யாட்டை நான் மிக​வும் மதிக்​கிறேன். அதே​போல் விளை​யாட்​டில் பங்​கேற்​கும் ஒவ்​வொரு வீரருக்​கும் நான் மதிப்பு கொடுக்​கிறேன்.

ஆனால், நான் அவரைப் பார்த்து பயப்​படு​கிறேன் என்​றோ, அவர் என்னை விட சிறந்​தவர் என்றோ அந்த பேட்​ஸ்​மேனுக்கு மன உறு​தி​யைக் கொடுத்​து​விட்​டால், விளை​யாட்​டில் நான் தோல்வி கண்​டு​விட்​டேன் என்று அர்த்​தம். எனவே, மன உறு​தியை விட்​டுத்​தர​மாட்​டேன்.

போட்​டி​யின்​போது எனக்கு அது மோச​மான நாளாக இருந்​தா​லும் சரி.. ஒரு​வேளை என்​னுடைய பந்​து​வீச்​சில் பேட்​ஸ்​மேன்​கள் ரன்​கள் குவித்​திருந்​தா​லும் சரி. அதுகுறித்து நான் கவலை கொள்​ள​மாட்​டேன். என்னை யாரும் வெல்ல முடி​யாது என்று மனதள​வில் என்னை திடப்​படுத்​திக் கொள்​வேன். இதைத்​தான் இது​நாள் வரை கிரிக்​கெட்​டிலிருந்து நான் கற்​றுக்​கொண்​டேன். அதன்​படி நடந்து வரு​கிறேன்.

கிரிக்​கெட்​டில் ஒவ்​வொரு நாளும் அது உங்​கள் நாளாக அமையப்​போவ​தில்​லை. அனைத்​தை​யும் நீங்​கள் கட்​டுப்​படுத்த முடி​யாது. ஆனால், உங்​களு​டைய வேலையை நீங்​கள் சரி​யாகச் செய்​ய​வேண்​டும். உங்​களை முழு​தாக நம்ப வேண்​டும். அப்​போதுதான் உங்​களால் சிறந்த செயல்​திறனை விளை​யாட்​டில் தர முடி​யும்.

நடப்பு சீசனில் எங்​கள் மும்பை அணி மிகச்​சிறந்த செயல்​திறனை வெளிப்​படுத்தி வரு​கிறது. ஓர் அணி​யாக நாங்​கள் மெது​வாக வெற்​றிகளைப் பெற ஆரம்​பித்​தோம். சரி​யான நேரத்​தில் உச்​சத்​துக்கு வந்​து​விட்​டோம். எங்​கள் அணி தனி நபரை மட்​டும் நம்​பி​யிருக்​காமல் வெற்​றிகளைக் குவித்து வரு​வது நல்ல அறிகுறி​யாகத்​ தென்​படு​கிறது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.