EBM News Tamil
Leading News Portal in Tamil

நியூஸ்கிளிக் பத்திரிகையாளர்கள் வீட்டில் சோதனைக்கு முன்பு 45 நாள் ரகசிய விசாரணை நடத்திய போலீஸ்


புதுடெல்லி: நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 45 நாட்கள் ரகசிய விசாரணை நடத்தியபிறகு, நியூஸ்கிளிக் அலுவலகம் மற்றும் பத்திரி கையாளர் வீடுகளில் டெல்லி சிறப்பு போலீஸார் சோதனை நடத்தி உள்ளனர்.

சீன அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு, அமெரிக்க கோடீஸ்வரர் நெவிலி ராய் சிங்கம் நிதியளித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் நியூஸ்கிளிக் நிறுவனமும் ஒன்று என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து சீன நிறுவனங்களிடம் இருந்து நியூஸ்கிளிக் நிறுவனம் பணம் பெற்றதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவுக்கு வழங்கியது. இதன் அடிப்படையில் நியூஸ்கிளிக் நிறுவனம் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி சிறப்புபோலீஸார் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.