புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி நேற்று முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை ஒரு வார கால பயணம் மேற்கொள்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, அங்கு பாஜக.வின் 2 பரிவர்தன் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று மதியம் நடந்த பரிவர்தன் மகாசங்கல்ப் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அக்டோபர் 3-ம் தேதி திரும்பி வரும் பிரதமர், பஸ்தர் பகுதியில் உள்ள ஜக்தல்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.