புதுடெல்லி: பிரதமர் தனது சுதந்திர தின உரைக்கு எதிர்வினையாற்றிள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமரின் பேச்சு அவரது ஆணவத்தைக் காட்டுகிறது. அடுத்தாண்டு அவர் வீட்டில் கொடியேற்றுவார் என்று கூறியுள்ளார்.
அடுத்தாண்டு செங்கோட்டியில் சந்திப்போம் என்ற பிரதமரின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "உங்களது வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில், வாக்காளர்களின் கையில் உள்ளது. 2024-ல் மீண்டும் ஒரு முறை செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று இப்போதே (2023) கூறுவது ஆணவம். அடுத்த ஆண்டு அவர் (பிரதமர் மோடி) மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார்" என்று தெரிவித்துள்ளார்.