EBM News Tamil
Leading News Portal in Tamil

புதிய தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட முனீஸ்வரன் சிலைகள் – சுதை சிற்பக் கலைஞர் அசத்தல் | Giant Muneeswaran statues using new technology in kanchipuram


​காஞ்​சிபுரத்தை அடுத்த தேனம்​பாக்​கம் ஸ்ரீபச்​சை​யம்​மன் கோயி​லில் இரும்பு ராடு கம்​பிகள் பயன்​படுத்​து​வதை தவிர்த்​து, 200 ஆண்​டு​கள் நீடித்து இருக்​கும் வகை​யில் தலா 100 கிலோ காப்​பர் கம்​பிகளால், புதிய தொழில்​நுட்​பத்​தில் பிரம்​மாண்​ட​மான 3 முனீஸ்​வரன் சிலைகளை தத்​ரூப​மான முறை​யில் மாமல்​லபுரம் சுதை சிற்​பக்​கலைஞர் வடிவ​மைத்​துள்​ளார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம் மாமல்​லபுரம் பகு​தியை சேர்ந்த சுதை சிற்​பக்​கலைஞர் ஸ்ரீதரன்​(47). சிற்​பக் கலைஞ​ராக உள்​ளார். இவர், மாமல்​லபுரம் அரசினர் சிற்​ப ​கலைக் கல்​லூரி​யில் சுதை சிற்ப பிரி​வில் பிஎஸ்சி பட்​டம் பெற்ற சிற்​பக் கலைஞ​ரா​வார். மேலும், தமிழகத்​தில் உள்ள அறநிலை​யத்​துறை கோயில்​கள் மற்​றும் தனி​யார் கோயில்​களில் அதி​கள​வில் சுதை சிற்​பங்​களை வடிவ​மைத்​து, தமிழக அரசின் விருதுகளை பெற்​றுள்​ளார்.

சுதை சிற்பக் கலைஞர் கோ.ஸ்ரீதரன்

இந்​நிலை​யில், காஞ்​சிபுரம் அடுத்த தேனம்​பாக்​கம் கிராமத்​தில் உள்ள ஸ்ரீபச்​சை​யம்​மன் கோயி​லில் திருப்​பணி​களை இவர் மேற்கொண்டு வரு​கிறார். இதில், அந்த கோயில் வளாகத்​தில் 12 அடி உயரத்​தில் வால்​முனி, 18 அடி உயரத்​தில் செம்​முனி, 10 அடி உயரத்​தில் சங்​கி​லி​முனி என 3 முனீஸ்​வரன் சுதை சிலைகளை வடிவ​மைத்​துள்​ளார்.

இவை நூற்​றாண்​டு​கள் தாண்டி நீடித்​திருக்​கும் வகை​யில் நவீன தொழில்​நுட்​பத்​தில் வடிவ​மைக்கப்பட்டுள்ளது. சுதை சிலைகள் இரும்பு ராடு​களை கொண்டு வடிவ​மைக்​கும்​போது, அவை உள்ளே துருபிடித்து சில ஆண்​டு​களில் அந்த சிலைகள் உடைந்து சிதிலமடைந்து விடும்.

இதனை தவிர்க்​கும் வகை​யில், 200 ஆண்​டு​கள் முனீஸ்​வரன் சிலைகள் பக்​தர்​களுக்கு அருள்​பாளித்து நீடித்​திருக்​கும் வகை​யில் வால்​முனி, செம்​முனி, சங்​கி​லி​முனி ஆகிய 3 சிலைகளை​யும் தலா 100 கிலோ காப்​பர் கம்​பிகளை கொண்டு 10 அடிக்​கும் மேலான உயரத்​தில் கம்​பீர​மான தோற்​றத்​தில் வடிவ​மைத்து வண்​ணம் தீட்​டப்​பட்டு உள்​ளது.

சென்​னை, செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர் மாவட்ட கோயில்​களில் முதன்​முறை​யாக காப்​பர் கம்​பிகளை கொண்டு அமைக்​கப்​பட்ட சிலைகள் இவை​தான். தற்​போது, கும்​பாபிஷேகம் நிறைவடைந்து பக்​தர்​கள் மேற்​கண்ட சுவாமி சிலைகளை பார்த்து வழிபட்டு வரு​கின்​றனர்.

இதுகுறித்​து, மாமல்​லபுரம் சுதை சிற்​பக்​கலைஞர் கோ.ஸ்ரீதரன் ஸ்த​பதி கூறும்​போது: தேனம்​பாக்​கம் ஸ்ரீபச்​சை​யம்​மன் கோயில் திருப்​பணி​கள் பழமை மாறாமல், பழங்​கால சுண்​ணாம்பு கலவை சிற்​பங்​களை போல, தத்ரூப​மாக சிமெண்ட் கலவை​யால் வடிவ​மைக்​கப்​பட்டு உள்​ளது.

குறிப்​பாக, 3 முனிகளின் சிலைகள் பழமை மாறாமல் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளதோடு, புயல், இடிமின்​னல், சூறாவளி​காற்று போன்ற பேரிடர்​களை தாங்கி நூற்​றாண்​டு​களைத் தாண்டி நீடித்து இருக்​கும் வகை​யில், இரும்பு கம்​பிகளை தவிர்த்து காப்​பர் கம்​பிகளால் 300 மூட்டை சிமெண்ட் கலவை​யின் மூலம், வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும், இச்​சிலைகள் வருங்​காலத்​தில் காப்​பர் கம்​பிகளை பயன்​படுத்​தும் தொழில்​நுட்​பத்​துக்கு எடுத்​துக்​காட்​டாக விளங்​கும்​ எனவும்​ நம்​புகிறேன்​ என்​றார்​.