மதுரை: “கடந்த 10 ஆண்டுகளாக நானும் இயற்கை விவசாயிதான். அமைச்சரானதால் விவசாயத்துக்கும் எனக்கும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது” என அமைச்சர் பி.மூர்த்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள வேளாண் உணவு வர்த்தக மையத்தில் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் அறக்கட்டளை, வேளாண் உணவு வர்த்தக மையம் சார்பில் “வைப்ரன்ட் தமிழ்நாடு” என்னும் வேளாண் உணவுப் பொருட்கள் அனைத்துலக வர்த்தகப் பொருட்காட்சி நடந்துவருகிறது. அதனையொட்டி இன்று பொருட்காட்சி அரங்கத்தில், விவசாயிகள், வணிகர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்த உதவும் வகையில் அறிமுகம் மேடை ( லான்ச்பேட்) என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.