சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை அபராதம் இன்றி செலுத்த கூடுதல் கால அவகாசம்…!
உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வரிகளை செலுத்த நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் கட்ட வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை எவ்வித அபராதமும் இன்றி ஜூன் 30 வரை செலுத்தலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதுதொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.