தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இதன் மூலம் 1372 பேருக்கு மொத்தம் கொரோனா பாதித்துள்ளது. இன்று மட்டும் திருப்பூரில் 28 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் குணமடைந்து வருபவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது.