EBM News Tamil
Leading News Portal in Tamil

தமிழகத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 98 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 1173 பேர் இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், இன்று 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது.

11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை குறைக்க வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கம்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் கண்டறியும் முன்னரே, சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

என்று கூறினார்.