EBM News Tamil
Leading News Portal in Tamil

கலாச்சார தூதராக முதுகுளத்தூர் விவசாயியின் மகள் தேர்வு  | Mudukulathur farmer daughter selected as cultural ambassador


ராமநாதபுரம்: ​தாய்​லாந்​தில் நடை​பெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்​டர்​நேஷனல் 2025′ போட்​டி​யில் பங்​கேற்ற முதுகுளத்​தூர் விவ​சாயி மகள் கலாச்​சார தூத​ராக தேர்வு செய்​யப்​பட்​டார். ராம​நாத​புரம் மாவட்​டம் முதுகுளத்​தூர் தெற்கு காக்​கூரைச் சேர்ந்த விவ​சாயி கஜேந்​திர பிரபு, அல்​லி​ராணி தம்​ப​தி​யின் மகள் ஜோதி​மலர் (28). இவர் பி.டெக். முடித்​து​விட்டு பெங்​களூரு​வில் ஐ.டி. நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். மேலும், மாடலிங்​கும் செய்து வரு​கிறார்.

அண்​மை​யில் புனே​யில் நடந்த `மிஸ் டூரிசம் அம்​பாசிடர் ஹெரிடேஜ் இந்​தியா 2025′ போட்​டி​யில் ஜோதி​மலர் வென்​றார். இதையடுத்து, கடந்த 8-ம் தேதி தாய்​லாந்​தில் நடை​பெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்​டர்​நேஷனல் 2025′ அழகிப் போட்​டி​யில் இந்​தியா சார்​பில் ஜோதி​மலர் பங்​கேற்​றார்.

சர்​வ​தேச நாடு​களுக்கிடையே அமை​தி, சுற்​றுலா, கலாச்​சா​ரப் பரி​மாற்​றத்தை மேம்​படுத்​தும் நோக்​கத்​துக்​காக நடத்​தப்​பட்ட மிஸ் ஹெரிடேஜ் இன்​டர்​நேஷனல் போட்​டி​யில் இந்​தி​யா​வின் பாரம்​பரிய, வளமான கலாச்​சா​ரம், மரபு குறித்து விளக்​கி​னார். இதையடு​த்து, ஜோதி​மலர் மிஸ் ஹெரிடேஜ் இன்​டர்​ நேஷனல் 2025 கலாச்​சார தூத​ராக தேர்வு செய்​யப்​பட்​டார்.

இதுகுறித்து ஜோதி​மலர் கூறும்​போது, “இந்​தியா சார்​பில் மிஸ் ஹெரி டேஜ் இன்​டர்​நேஷனல் கலாச்​சார தூத​ராக தேர்​வானது பெரு​மை​யாக உள்​ளது. சர்​வ​தேச அரங்​கில் நமது நாட்​டின் வளமான கலாச்​சா​ரம், மரபு​கள், பாரம்​பரி​யத்தை பிர​தி​நி​தித்​து​வப்​படுத்​தி​ய​தில் பெரு​மை​யாக உள்​ளது” என்​றார்.