EBM News Tamil
Leading News Portal in Tamil

தமிழகத்தில் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு அதிகரிப்பு | Increase in cough, fever and diarrhea due to climate change


சென்னை: தட்​பவெப்ப நிலை மாற்​றத்​தால் காய்ச்​சல், வயிற்​றுப்​போக்கு அதி​கரித்​துள்​ளது. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. இந்த தட்​பவெப்ப நிலை மாற்​றத்​தால், காய்ச்​சல், தலை​வலி, இரு​மல், வயிற்​றுப்​போக்கு உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளன. குழந்​தைகள் முதல் பெரிய​வர்​கள் வரை இத்​தகைய நோய்​களால் பாதிக்​கப்​பட்டு அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இதுதொடர்​பாக மருத்​து​வர்​களிடம் கேட்​ட​போது, “மழை காரண​மாக வைரஸ், பாக்​டீரியா தொற்​றுகள் அதி​கரித்து வரு​கின்​றன. குடிநீர் மாசு​பாடு, அசுத்​த​மான உணவின் மூலம் ஜீரண மண்​டலம் சார்ந்த பாதிப்​பு​கள் ஏற்​படு​கின்​றன. குறிப்​பாக, வயிற்​றுப்​போக்கு, அஜீரண பாதிப்​பு​கள் அதி​கரித்​துள்​ளன. சிலருக்கு அதனால் நீர்ச்​சத்து இழப்​பு, காய்ச்​சல் ஏற்​படு​கிறது. மேலும், தலை​வலி, இரு​மல் பிரச்​சினை​களாலும் பலர் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

எனவே, ஆரம்​பத்​திலேயே மருத்​து​வரை அணுகி சிகிச்சை பெற வேண்​டும். குறிப்​பாக, வயிற்​றுப்​போக்கை அலட்​சி​யப்​படுத்​தாமல் உப்பு – சர்க்​கரை கரைசல், நீர், மோர், பழச்​சாறு, இளநீர் போன்​றவற்றை போதிய அளவு அருந்தி உடலில் நீர்ச்​சத்து இழப்பு ஏற்​ப​டாமல் தடுக்க வேண்​டும். காய்ச்​சிய நீரை பரு​கு​வதுடன், வெளி உணவு​களைத் தவிர்க்க வேண்​டும்” என்​றனர்.