விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றுவது குறித்து சிறுநீரக மருத்துவர் வசிஷ்டா ததாபுடி கருத்து தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் லாங்கோன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜியின் ஆறாவது ஆண்டு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் மருத்துவர் வசிஷ்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றுவது தொடர்பான சாத்தியம் குறித்து அவர் பேசி இருந்தார்.