பிரபல இந்தி நடிகை ஈஷா குப்தா. தமிழில் ‘யார் இவன்’ என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போது, இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, இயக்குநர் என்னிடம் பாலியல் சலுகையை எதிர்பார்த்தார். ஆனால் மறுத்துவிட்டேன். பாதி படம் முடிந்தபின் மீண்டும் தொல்லையைத் தொடர்ந்தார். படத்தில் இருந்து நீக்கப்படுவேன் என்று இணைத் தயாரிப்பாளர் கூறினார்.