EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா பாதிப்பு: உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அமெரிக்க மக்கள்!

உள்ள ஜோனஸ்போரோ என்ற இடத்தில் உணவு வங்கிகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. கடும் சூறாவளிகள் தாக்கியபோதும் இவ்வளவு உணவுத் தேவை அதிகரித்ததில்லை என்று உணவு வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

100 பேர் அளவுக்கே உணவளிக்க முடியும் என்ற சூழலில் சுமார் 900 பேர் தினசரி உணவுக்காக வருவதாகவும் அந்த வங்கிகள் தெரிவிக்கின்றன. நன்கொடைகள் குறைந்துள்ளதாக கூறும் நிர்வாகிகள் கொரோனா அச்சத்தால் உணவுப் பொருட்களை பார்சல் செய்யவும், போதிய பணியாட்கள் வருவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை இவ்வளவு தேவை, பற்றாக்குறை மற்றும் பதற்றத்தை மக்களிடம் கண்டதில்லை என்றும் உணவு வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.