Ultimate magazine theme for WordPress.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1885 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று 60 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில், இன்று 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.