Ultimate magazine theme for WordPress.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: கல்வியாண்டின் துவக்கத்திலேயே, பிளஸ் 2 , பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1 முதல் மார்ச் 19ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவு 19.4.19 அன்று வெளியிடப்படும்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு 06.03.19 முதல் 22.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவு 8.5.19 அன்று வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.19 முதல் 29.3.19 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 29.4.19 அன்று வெளியிடப்படும்.
மாணவர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில, தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.