Ultimate magazine theme for WordPress.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 11வது முறையாக பட்டம் வென்றார் ரஃபேல் நடால்!

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ரோலண்ட் காரோஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்று நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் ரஃபேல் நடால் 11வது முறையாக வென்று சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் ரபெல் நடால், ஆஸ்திரியாவின் வீரரான டொமினிக் தியமுடன் மோதினார். 

இதில், அபாரமாக ஆடிய நடால், 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கெனவே, 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடாலுக்கு, இந்த வெற்றியின் மூலம் 11-வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இது பிரெஞ் ஓபனில் நடால் பெற்ற 11வது பட்டம் மற்றும் நடாலின் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.

இதற்கு முன் 2005-2008, 2010-2014, 2017-இல் கோப்பையை வென்றுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.