Ultimate magazine theme for WordPress.

திருச்சியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்த மொத்த காய்கறிச் சந்தை..!

திருச்சியில் மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சியில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க 8 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டன. அத்துடன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பால் பண்ணை அருகே காய்கறி மொத்த வியாபாரம் செய்யப்படும் என்றும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மட்டும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு பொதுமக்கள் ஏராளமானோர் மொத்த காய்கறி சந்தையில் குவிந்தனர். இதனால், பழைய பால்பண்ணை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

Leave A Reply

Your email address will not be published.