Ultimate magazine theme for WordPress.

கேரளாவில் 52%… தமிழ்நாட்டில் 4.94%…! குணமடைவர்கள் சதவிகிதத்தில் பின் தங்கும் தமிழகம்!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைவர்களின் சராசரி நாட்டின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ளதோடு, இதுவரை 339 பேர் உயிரிழந்துள்ளதனர். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 31 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1205 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது தற்போதைய சூழலில் குணமடைவர்களின் சராசரி 11.38 சதவிகிதமாக உள்ளது. அதேபோல், 3.38 சதவீதத்தினர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் 13ம் தேதி மருத்துவ அறிக்கையின் படி 1173 பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 உயிரிழந்துள்ளனர், 58 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவர்களின் சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் அதிகம் கொரோனா நோய் தொற்று உள்ள மகாராஷ்டிராவில் குணமடைவர்களின் சராசரி 10 சதவீதமாக உள்ளது.

வெற்றிகரமாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி உள்ள மாநிலமான கேரளாவின் குணமடைவர்களின் சராசரி 52 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கேரளாவில் தான் குணமடைந்து வீடுதிரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.அதேபோல், தெலுங்கானாவில் 17 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 13.48 சதவீதமாகவும், 9.45 சதவீதமாகவும், உத்தர பிரதேசத்தில் 8.78 சதவீதமாகவும், மத்திய பிரதேசத்தில் 8.3 சதவீதமாகவும் குணமடைவர்களின் சராசரி இருந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவர்களின் சராசரி 4.94 சதவீதம் மட்டுமே என்ற புள்ளிவிபரம் அதிர்ச்சி அளிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.