EBM News Tamil
Leading News Portal in Tamil

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி – மத்திய அரசு

இதுகுறித்து தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கொரோனா பாதிப்பையொட்டி தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ பாடப்பிரிவில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.