Ultimate magazine theme for WordPress.

இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து

தனது 75வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழில் அன்னக்கிளி படம் மூலம் அறிமுகமானா இளையராஜா. 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய பிறந்த தினத்தையொட்டி, ரசிகர்கள் ஏராளமானோர், வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…!
இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர், இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டுத் தொடக்கத்தில், அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் சிறப்பாக, இசை மாமேதைக்கு மத்திய அரசு பத்ம விருது வழங்கியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை வழங்கி இளையராஜாவை கவுரவித்தார் என்பது குறிபிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.