Ultimate magazine theme for WordPress.

இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரையும் வென்றுள்ளது இந்திய அணி

இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரையும் வென்றுள்ளது இந்திய அணி.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது.

இரண்டாவதாக சேசிங் செய்யத் தொடங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவடைய ஐந்து பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், ஏழு விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
ஆனால், இந்த வெற்றி அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒரு கட்டத்தில், 27 ஓவர்கள் முடிவதற்குள்ளேயே 160 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்திய அணி.

ஏழாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய க்ருனால் பாண்ட்யா ஓரளவு நிலைத்து நின்று 54 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க, எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய தீபக் சகார், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 82 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் போட்டிகளில் இது அவரது முதல் அரை சதம்.

இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தபோது தாம் வீசிய எட்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கையின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த உதவியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.