Ultimate magazine theme for WordPress.

சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று…!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சென்னை முதல் முறையாக மார்ச் 18-ஆம் தேதி டெல்லியில் இருந்து ரயிலில் மூலம் வந்த வடமாநில வாலிபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 2058 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில், 32.7 சதவீதமாகும். சென்னையில் நேற்று மட்டும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே சென்னை கோயம்பேடு மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் 4 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மேலும் மூவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. காய்கறி வியாபாரி, பூ வியாபாரி, பழ வியாபாரி, கூலித்தொழிலாளிகள் என கோயம்பேடு மார்கெட்டில் இயங்கி வந்தவர்கள் என்பதால் இவர்களுடன் மறைமுகமான தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிப்புக்குள் கொண்டு வருவது சவாலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.