Ultimate magazine theme for WordPress.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் – ’டாப் 3’ மாநிலங்களில் தமிழகம்

கொரோனாவால் குணமடைந்தோர் விகிதத்தில் டாப் 3 மாநிலங்களில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.

கொரோனாவால் அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 30.06 சதவிகிதமாக உள்ளது. அதிகபட்சமாக கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இருந்து இதுவரை 75 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,032 ஆக அதிகரித்துள்ளதோடு, இதுவரை 570 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,969 பேர் குணமடைந்துள்ளனர்.

அதாவது தற்போதைய சூழலில் நாட்டில் குணமடைவர்களின் சராசரி 16.4 சதவிகிதமாக உள்ளது. அதேபோல், 3.16 சதவீதத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் 20ம் தேதி மருத்துவ அறிக்கையின் படி 1,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 17 உயிரிழந்துள்ளனர். 457 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வாரம் வரை 5 சதவீகிதமாக இருந்த குணமடைந்தோர் விகிதம், தற்போது 30.06 சதவிதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இருந்து இதுவரை 75 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். அடுத்தபடியாக கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து 53 பேரும், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து 51 பேரும் குணமடைந்தது வீடு திரும்பி உள்ளனர்.

அதிக கொரோனா நோய் தொற்று உள்ள மகாராஷ்டிராவில் குணமடைவர்களின் சராசரி 11.3 சதவீதமாக உள்ளது. அதேபோல், டெல்லியில் 14.47 சதவிதமாகவும், கர்நாடகாவில் 27.45 சதவிதமாகவும், வெற்றிகரமாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி உள்ள மாநிலமான கேரளாவின் குணமடைபவர்களின் சராசரி 71.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.