Ultimate magazine theme for WordPress.

அரியலூரில் மெடிக்கலில் பணியாற்றிய 2 பெண்களுக்கு கொரோனா தொற்று…!

அரியலூரில் மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அவர்கள் வேலைபார்த்த மெடிக்கலின் உரிமையாளர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் ஆவார். இவரை தனிமைப்படுத்தி சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என விடுவித்தனர்.

இந்நிலையில் அவரது கடையில் வேலை பார்த்த செந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உறவினர்கள் 10 பேரையும் தனிமைப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மெடிக்கலில் வேலை பார்த்த பெண்களுக்கு தொற்று உறுதி ஆகியிருப்பதால் அரியலூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.