Ultimate magazine theme for WordPress.

அமெரிக்க போர்க்கப்பலில் 550 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு!

அமெரிக்க போர்க்கப்பலில் 550 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் அருகேயுள்ள குவாம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலில் 4800 வீரர்கள் இருந்தனர். அவர்களில் 92 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 550 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் பணியிலிருந்த கேப்டன் க்ரோஸியர், கப்பலில் தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து எழுதிய கடிதம் வெளியான நிலையில் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கப்பலில் 550 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.