EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்த 6 பகுதி மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 163 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, உறுதி செய்யப்பட்ட நபர்கள் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற மண்டலம் வாரியான விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 45 பேரும், திருவிக நகரில் 24 பேரும், கோடம்பாக்கத்தில் 19 பேரும், அண்ணாநகரில் 17 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 14 பேரும், தேனாம்பேட்டையில் 12 பேரும் உள்ளனர்.மேலும், பெருங்குடியில் 6 பேரும், வளசரவாக்கம், அடையாறு, திருவொற்றியூரில் தலா 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் தலா 2 பேரும் உள்ளனர்.
சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.