Ultimate magazine theme for WordPress.

வங்கியில் தாக்குதல் நடத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற தீவிரவாதிகள்

காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணத்தைக் கொள்ளையடித்த தீவிரவாதிகள், காவலில் இருந்த பாதுகாவலர்களின் துப்பாக்கியையும் பறித்துச் சென்றுள்ளனர்.
தெற்குக் காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டத்தின் கப்ரானில் உள்ள வங்கிக் கிளையில் இன்று பிற்பகல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வங்கி ஊழியர்களைத் தாக்கி, வங்கியில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தவிர, துப்பாக்கி ஒன்றையும் பாதுகாவலர்களிடம் இருந்து பறித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் தீவிரவாதிகளைத் தேடும் படலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நீண்ட நாட்கள் ஊடுருவல் இல்லாமலிருந்து நேற்று மீண்டும் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடங்கியுள்ளது.
இந்த ஊடுருவலை எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்து வருகின்றனர். 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து ராணுவ நடவடிக்கை நடைபெற்றுவரும் நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் இணைய தளசேவை முடக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.