Ultimate magazine theme for WordPress.

ஜூன் 20, விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடல்

புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் வரும் 20ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
மத்திய அரசின் நலத் திட்டங்களால் பலன் அடையும் மக்களிடம் பிரதமர் கலந்துரையாடி வருகிறார். இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள், சுகாதார திட்டங்கள் உள்ளிட்டவை மூலம் பயன்பெற்ற 4 கோடி பயனாளிகளுடன் நேற்று பிரதமர் மோடி உரையாடினார்.
அதன் தொடர்ச்சியாக, வேளாண்துறை வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து வரும் 20 ஆம் தேதி விவசாயிகளுடன் கலந்துரையாட இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கிராமங்களில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்க உள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.